தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்கள் பலரும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகின்றனர்.
சென்னையில் ராயபுரம் தொகுதியில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி, தன்னுடைய வெற்றிச் சான்றிதழைத் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினிடம் அளித்து வாழ்த்துப் பெற்றார்.
இந்த சந்திப்பின்போது, திமுக வர்த்தகர் அணிச் செயலாளர் கவிஞர் காசிமுத்துமாணிக்கம், சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா ஆகியோரும் உடனிருந்தனர்.