தண்ணீர் லாரிக்கு முன்னும் பின்னும் ஏன் போலீஸ் பாதுகாப்பு போகிறது?
தண்ணீர் லாரியை யாரோ கடத்தப் போறதா போலீசுக்குத் தகவல் வந்திருக்கு
- ஆர்.மகாதேவன், திருநெல்வேலி .
என்னைக் கல்யாணம் பண்ணினதும் என் புருஷனுக்கு இருந்த தோஷம்
போயிடுச்சு'
என்ன தோஷம்?
சந்தோஷம்
- எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.
**
நான் எது சொன்னாலும் என் மனைவி உடனே ஓ.கே.சொல்லிடுவா அப்படியா கேட்கவே சந்தோஷமா இருக்கே....'
சமையல் ரெடி... உடனே சாப்பிடலாம்ன்னு நான் சொன்னா... உடனே ஓ.கே.சொல்லிடுவா''
- விஜயா சுவாமிநாதன், திருச்சி -3
ஏம்ப்பா ஏட்டு இவன் என்ன கேஸ்ல மாட்டிக்கிட்டான்?
தண்ணிப் பார்ட்டியாம்
என்ன புதுசா இருக்கு?'
எங்க தண்ணி கேன் இருந்தாலும் திருடிட்டுப் போயிடுவானாம்
- ஆர்.எம்., திருநெல்வேலி
முதலாளிக்கு இன்னும் பணத்தாசை போகலை எப்படிச் சொல்றே?
அங்கே எல்லாரும் சாமியைச் சுற்றி வர்றாங்க. இவர் மட்டும் உண்டியலைச் சுற்றி வர்றாரே?
**
மருமகளே நான் உன்னைத் திட்டுற திட்டுக்கள் எல்லாம் உனக்கு மனவருத்தம் தரலேன்னா... என்னிடம் சொல்லு
எதுக்கு அத்தே?
நீ வருத்தப்படும்படியா மாற்றி திட்டணுமே.... அதுக்குத்தான்
- கே.அருணாசலம், தென்காசி
மாப்பிள்ளை தங்கமானவர். ரொக்கமா ரெண்டு லட்சம் தர்றேன்னு சொன்னேன்.
வேண்டாம்னுட்டார். 20 பவுன் போடுறேன்னு சொன்னேன். வேண்டாம்னுட்டார்
ரொம்ப தங்கமானவரா தெரியுறாரே.... அப்புறம்?
என் பொண்ணையும் வேண்டாம்னுட்டாரே
- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.
கூட்டத்திலே பேசிக் கொண்டிருந்த தலைவர் செருப்பு வந்து விழுந்ததும் ஏன் ஒரே குழப்பமாயிட்டார்?
கூட்டத்திலே பார்வையாளர் ஒருவர் மட்டும்தான் இருந்தாராம். ஆனால் ரெண்டு ஜோடி செருப்புகள் மேடையிலே வந்து விழுந்து இருக்கு. அது எப்படின்னு குழப்பமாயிட்டார்
- ஆர்.ஹரிகோபி, புதுடெல்லி