டோட்டோக் செயலி பயன்பாடு குறித்து கூகுள் ஸ்டோர் தனது பயனர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்தியை அனுப்பியுள்ளது.
டோட்டோக் (ToTok) செயலி சாட்டிங், ஆடியோ, விடியோ வாய்ஸ் கால் செய்ய பயன்படுகிறது. இந்நிலையில், இந்த செயலி எஸ்.எம்.எஸ் செய்திகள், புகைப்படங்கள், ஆடியோ பதிவுகள், அழைப்பு வரலாறு போன்ற பயனர்களின் தனிப்பட்ட தரவை உளவு பார்க்க முயற்சிக்கிறது.
டோட்டோக் ஒரு உளவு கருவியாகப் பயன்படுத்தப்படுவதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலிருந்து முன்னதாக நீக்கப்பட்டது.
அந்த சமயத்தில், டோட்டோக் இணை நிறுவனர் ஜியாக், ஒரு விடியோ பதிவை வெளியிட்டார். தொடர்ந்து, இரண்டு தொழில்நுட்ப நிறுவனங்களிடமும் தங்களது செயலியை மீண்டும் கொண்டுவர உதவுமாறு கோரிக்கை விடுத்தார்.
இதனால், கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் நீக்கப்பட்ட நிலையில் மீண்டும் சில நிபந்தனைகளுடன் ஜனவரி மாத தொடக்கத்தில் டோட்டோக் செயலி மீண்டும் சேர்க்கப்பட்டது.
இதற்கிடையே, இந்த செயலியில் பயனர்கள் தகவல் ஏதேனும் திருப்பட்டுள்ளதா? என்பது குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு கவனித்து வருகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து வாட்ஸ்ஆப், ஸ்கைப், பேஸ்புக் விடியோ கால் வசதி துண்டிக்கப்பட்டதையடுத்து, டோடோக் போன்ற செயலிகள் மாதாந்திர கட்டணத்தில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
தற்போது தொடர் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் விரல் இந்த செயலியை முடக்கும் முயற்சியில் கூகுள் ஈடுபட்டுள்ளது. மேலும், இந்த செயலி குறித்த எச்சரிக்கை செய்தியும் கூகுள் தனது பயனர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக தெரிவித்துள்ளது.