மகிழ்ச்சியையும், துக்கத்தையும் மூளை எவ்வாறு சமன் செய்கிறது தெரியுமா?

மூளையில் உள்ள நியூரான்கள் நம்மில் ஏற்படும் சந்தோஷத்தையும், துக்கத்தையும் எவ்வாறு சமன் செய்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
மகிழ்ச்சியையும், துக்கத்தையும் மூளை எவ்வாறு சமன் செய்கிறது தெரியுமா?

மூளையில் உள்ள நியூரான்கள் நம்மில் ஏற்படும் சந்தோஷத்தையும், துக்கத்தையும் எவ்வாறு சமன் செய்கின்றன என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மனித உடலின் அனைத்து முக்கிய செயல்பாட்டுக்கும் காரணமாக இருப்பது மூளைதான். ஐம்புலன்களின் உணர்ச்சிகள், இதயத்துடிப்பு, கை, கால் உறுப்புகளின் செயல்பாடு, தசைகளின் செயல்பாடு உள்ளிட்ட உடலின் அனைத்து உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் ஆணிவேராக மூளை செயல்படுகிறது. நமது உடலில் மூளையின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதுதான் கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். அந்த அளவுக்கு மூளை இன்னும் அறிவியலாளர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

அந்த வகையில், நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்ட கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தின் ஆராய்ச்சியாளர்கள் மூளையின் செயல்பாடு குறித்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

அதில், மூளையில் உள்ள வெவ்வேறு வகை நியூரான்கள் நேர்மறை மற்றும் எதிர்மறை என கலவையான உந்துதலை ஏற்படுத்துகின்றன என கண்டறியப்பட்டுள்ளது. அதாவது, நாம் துக்கத்தில் இருக்கும்போதும், மகிழ்ச்சியில் திளைக்கும்போதும் எதிரெதிர் சமிக்ஞைகளை அனுப்புகின்றன.

நாம் ஆழ்ந்து சிந்திக்கும் போது இடதுபக்க மூளைதான் அதிகம் செயல்படுகிறது. அதே நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்கும்போது வலதுபக்க மூளை செயல்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவை இரண்டுக்கும் இடையில் ஒரு சமநிலையும் உருவாகிறது. இந்த இரண்டு வகையான உயிரணுக்களுக்கு இடையிலான செயல்பாடுதான் சமநிலை. அந்த சமநிலையில், நமது மூளை செயல்பாட்டை பொறுத்தே நாம் மகிழ்ச்சியான அனுபவத்தைத் தேடி செல்கிறோமா அல்லது துக்கத்தினை தவிர்க்க விரும்புகிறோமா என்பதை முடிவு செய்கிறோம். இது ஒவ்வொரு நபரை(ஒவ்வொரு மூளையின் செயல்பாட்டை) பொறுத்தும் வேறுபடும்.

மன அழுத்தத்தால் நாம் அதிகம் பாதிக்கப்படும்போது, மூளையில் உள்ள நியூரான்கள் நமக்கு ஒரு சிக்னலை அனுப்பும். அது தற்போதைய நிலைக்கு எதிரான செயல்களை செய்யத் தூண்டும். அதாவது, துக்கத்தில் இருக்கும்போது மகிழ்ச்சியான வழியைத் தேடிச் செல்ல தூண்டுகிறது. எடுத்துக்காட்டாக, மனநிலை சரியில்லாத சமயத்தில் நீண்ட தூரம் பயணிக்கும்போது அந்த நடத்தை மாற்றங்களினால் துக்கநிலை சமன் செய்யப்படுகிறது. ஒருவேளை அந்த நேரத்தில் நடத்தை மாற்றங்கள் நிகழாதபோதுதான், நாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். அது உச்ச கட்டத்தில் செல்லும்போது மனநலம் பாதிக்கப்படுகிறது. 

நமது நடத்தை மாற்றங்களே நமது மூளையின் செயல்திறனை நிர்ணயிக்கின்றன. நமது மூளையின் முக்கிய பரிணாமப் பகுதியான வென்ட்ரல் பாலிடத்தில் நியூரான்களைத் தடுக்கும் அல்லது உற்சாகப்படுத்தும் சிக்னல்களுக்கு இடையிலான சமநிலையே இம்மாதிரியான உந்துதலை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 

எனவே, மகிழ்ச்சி, துக்கம் இரண்டையும் சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். துக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்குமோ அதன் வழிகளைத் தேடிச் செல்லுங்கள். உடலையும், மனதையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளுங்கள். 

தொடர்ந்து, மனநல குறைபாடு உள்ளவர்களுக்கு எவ்வாறு அந்த பாதிப்பு ஏற்படுகிறது? மனநல பாதிப்பு ஏற்பட்ட பின்னர் அவர்களது மூளை எவ்வாறு செயல்படுகிறது என அடுத்த ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com