2019 - 2020 ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் உடனுக்குடன் இங்கே.. தினமணி.காம் உடன் இணைந்திருங்கள்!
ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் 2% ஆக இருக்கும்.
குறைந்த விலையில் வீடுகளுக்கான வட்டியில் கூடுதலாக ரூ.1.50 லட்சம் வரி விலக்கு பெறலாம்.
நாட்டில் ரூ.400 கோடி வரை வர்த்தகம் செய்யும் நிறுவனங்களுக்கு இனி 25% வரி விதிக்கப்படும்.
கடனில் வாங்கப்படும் மின்சார வாகனத்துக்கான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும்.
5 ஆண்டுகளில் நேரடி வரி வருவாய் 78% உயர்ந்துள்ளது. நேரடி வரி வருவாய் ரூ.6.3 லட்சம் கோடியிலிருந்து ரூ.11.37 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியாவின் சர்வதேச கடன் அளவு நாட்டின் ஜிடிபியில் 5 சதவிகிதத்துக்குள் உள்ளது.
புறநகர் ரயில் சேவையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வங்கிகளில் வாராக் கடன் கடந்தாண்டில் ஒரு லட்சம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
கழிவு நீர் மற்றும் சாக்கடை கழிவுகளை அகற்ற ரோபோக்கள் பயன்படுத்தப்படும்.
இந்தியா விரைவில் உயர்கல்வி மையமாக மாறும்.
வெளிநாட்டு மாணவர்களையும் ஈர்க்கும் வகையில் இந்தியாவில் படியுங்கள் திட்டம் முன்னெடுக்கப்படும்.
தேசிய விளையாட்டுக் கல்வி வாரியம் அமைக்கப்படும்.
உலகின் சிறந்த 200 கல்வி நிறுவனங்களின் பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கல்வி நிறுவனங்கள் ஒன்றும் இடம்பெறவில்லை. தற்போது இந்தியாவின் 3 கல்வி நிறுவனங்கள் இடம்பிடித்துள்ளன.
2024ம் ஆண்டுக்குள் அனைத்துக் கிராமங்களில் உள்ள வீடுகளுக்கும் சுகாதாரமான குடிநீர் உறுதி செய்யப்படும்.
குடிநீர் பிரச்னை இருக்கக் கூடாது என்பதை மத்திய அரசு பிரதான நோக்கமாகக் கொண்டுள்ளது.
அனைத்து இந்தியர்களுக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
2022ம் ஆண்டுக்குள் ஊரக பகுதியில் உள்ள அனைத்து வீடுகளும் எல்பிஜி கேஸ் இணைப்புப் பெற்றிருக்கும்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு மானியம் வழங்கப்படும்.
மேலும் 300 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.