தேவையான பொருள்கள்:
சக்கரைவள்ளிக்கிழங்கு - 2
கோதுமை மாவு - 1 கிண்ணம்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரித்தெடுக்க
செய்முறை :
சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி, தோலை நீக்கி துண்டங்களாக்கி ஆவியில் வேகவைத்து மசிக்கவும். கோதுமை மாவில் உப்பு சேர்த்து வேக வைத்துள்ள சர்க்கரைவள்ளிக்கிழங்கை அதனுடன் போட்டு பிசைந்து உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் அப்பளமாகத் தேய்த்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் போட்டு இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.