கோடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீதேவி கருமாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி மற்றும் 108 தின அலங்கார நிறைவு விழாவாகவும், மும்பெரும் தேவியர்களின் அருளுக்காகவும், விசேஷ மஹா சண்டி யாகம், விசேஷ பூஜைகள் நடைபெற உள்ளது.
வைபவ நிகழ்ச்சி நிரல்
முதல் கால வைபவம் அக்டோபர் 22-ம் தேதி காலை 10.00 மணிக்கு தொடங்குகின்றது. கணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், சங்காபிஷேகம் ஆகியவை நடைபெற உள்ளது.
இரண்டாம் கால வைபம் 22-ம் தேதி மாலை 5.00 மணிக்கு தொடங்குகின்றது. அதில் கோ பூஜை, தம்பதி பூஜை, ஸப்த கன்னி பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
மூன்றாம் கால வைபம் 23-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்குகின்றது.
தேவி கருமாரி அம்மனுக்கே உரித்தாகக்கூடிய தேவி மஹாத்மியம் சுலோகங்கள் பாராயணம், விசேஷ மஹா சண்டியாக ஆஹாஹனம், அர்ச்சனம் ஹோமம் மற்றும் தீப ஆராதனையுடன் விழா நிறைவு பெறுகிறது.
மேலும் தொடர்புக்கு: 9884328777