மணிமங்கலம் பகுதியில் உள்ள ஸ்ரீதர்மேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சியையொட்டி செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
குன்றத்தூர் ஒன்றியம் மணிமங்கலம் அண்ணா சாலையில் பழைமையான வேதாம்பிகை உடனுறை தர்மேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு குருபெயர்ச்சியையொட்டி தர்மேஸ்வரர், வேதாம்பிகை, தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பால், இளநீர், தயிர், விபூதி, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் 200 பேருக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது. விழாவில் மணிமங்கலம், சேத்துப்பட்டு, முடிச்சூர், தாம்பரம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.
தட்சிணாமூர்த்திக்கு நெய் விளக்கு ஏற்றி பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். முன்னதாக சுவர்ணாபிஷேகம் நடைபெற்றது.
குரு பெயர்ச்சியையொட்டி, காஞ்சிபுரத்தை அடுத்த கோவிந்தவாடி அகரம் குரு பகவான் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த குரு தட்சிணாமூர்த்தி. (வலது) காஞ்சிபுரம் பழைய ரயில்
நிலையம் அருகில் சிறப்பு சந்தனக்காப்பு அலங்காரத்தில் யோக தட்சிணாமூர்த்தி.