நீங்கள் வசிக்கும் இடத்தை தன ஆகர்ஷணம் (பண வரவு பல மடங்கு அதிகரித்தல்) மிக்கதாக மாற்ற என்ன பரிகாரம் செய்யலாம்? என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஒரு கண்ணாடி பாட்டிலில் சிறிது முனை உடையாத பச்சரிசியை இடவும், பின் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றை இடவும். மேலும் சிறிது அரிசியை இட்டு இரண்டு ரூபாய் நாணயம் ஒன்றை இடவும் பின் சிறிது அரிசி, அதன் மேல் ஒரு ஐந்து ரூபாய் நாணயம், மேலும் சிறிது அரிசி அதன் மேல் 10 ரூபாய் நாணயம் பின் மேலும் சிறிது அரிசி பாட்டில் நிறையும் வரை இட்டு மூடவும். பின்பு மூடியில் சிறிதாக ஆறு துளையிடவும்.
இதை தங்கள் வீட்டு ஷோகேஸ் அல்லது பூஜை அறையில் வைக்கலாம். அலுவலகமாக இருப்பின், பணப்பெட்டி அருகே வைத்து விடவும். எங்கே வைப்பதாக இருந்தாலும் தினசரி தங்கள் கண் பார்வை அதன்மேல் படும் இடமாக இருக்க வேண்டும். இவ்வாறு வைப்பதன் மூலம், பிரபஞ்ச சக்தி மூலம் தன ஆகர்ஷணம் செய்யும் சக்தி இதற்கு உண்டு.
மாதம் ஒரு முறை அரிசியை பறவைகளுக்கு இட்டு பின் அதே நாணயங்களை வைத்து மாற்றவும். இந்த சூட்சும பரிகாரம் மிக விரைவில் பலன் தரக்கூடியதாகும். தாங்கள் இருக்கும் இடம் பண வரவு பலமடங்கு அதிகரிக்கும்.