கோமேதகம் அணிந்தால் யாருக்கெல்லாம் யோகம்?

ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்த வகையில் திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்காரர்கள் எந்த வகையான கற்களை அணிந்தால் யோகம் ஏற்படும் என்று பார்ப்போம். 
கோமேதகம் அணிந்தால் யாருக்கெல்லாம் யோகம்?


ஒவ்வொரு ராசி கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்த வகையில் கோமேதக கல் யாரெல்லாம் அணியலாம். அவ்வாறு அணிவதால் என்ன பலன்  கிடைக்கும் என்பதைப் பார்ப்போம். 

நவரத்தினங்களில் ஒன்றாக கோமேதகம் விளங்குகிறது. இது காப்பி நிறத்துடன் சற்று மஞ்சள் கலந்து காணப்படும். சில வகையான கற்கள், தேனின் நிறமுடையதாகவும் இருக்கும்.

பழங்கால நூல்களில் கோமேதகம் கோமூத்திரம் என்று கூறப்படுகிறது. பசுவின் சிறுநீர் நிறத்தில் உள்ள கல் என்பதாலேயே இதற்குக் கோமேதகம் என்று பெயரிட்டனர்.

தோஷமற்ற கோமேதகம் அணிவதால், அது பயங்கரமான, எதிரிகளைக்கூட வெல்லக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியமும், நல்ல செல்வச் செழிப்பும் உண்டாகும்.  தொழில் வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது இந்தக் கல். பண வரவை அதிகரிக்கும். பங்கு வணிகத்தில் இருப்பவர்களுக்கு சிறப்பான பலனைக் கொடுக்கும்.

வாத நோய்களையும், பித்த நோய்களையும் நீக்கும் தன்மை உடையது. இதன் பஸ்பமானது இரத்தப் புற்றுநோய் போன்றவற்றைக் குணமாக்கும். நல்ல உடல் அழகையும், நரம்புகளுக்குப் புத்துணர்வையும் தரும்.

ராகு திசை நடப்பவர்கள் கோமேதகம் அணிவதன் மூலம் இல்லற வாழ்வில் இனிமை உண்டாகும். சொத்து வகையில் மேன்மை கிடைக்கும். பங்காளிகள் வகையில் உதவி கிடைக்கும். பாரம்பரிய தொடர்பு கிட்டும். அரசு அனுகூலப் பதவியில் உயர்வைக் கொடுக்கும்.

அணிய வேண்டியவர்கள்:


திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரக்கார்கள் மற்றும் எண்கணிதபடி 4, 13, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் விதி எண் பெயர் எண் 4 வருபவர்களும் கோமேதகம் அணியலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com