சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்

திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா தரிசனம் அனைத்து சிவாலயங்களிலும் விமரிசையாக நடைபெற்றது.
சிவாலயங்களில் ஆருத்ரா தரிசனம் கோலாகலம்: பக்தர்கள் பரவசம்


சென்னை: திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா தரிசனம் அனைத்து சிவாலயங்களிலும் விமரிசையாக நடைபெற்றது. இன்று அதிகாலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து நடராஜபெருமானை தரிசனம் செய்து வருகின்றனர். 

ஆண்டுதோறும் திருவாதிரை நட்சத்திரம் அன்று அனைத்து சிவாலயங்களிலும் ஆருத்ரா தரிசன விழா கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் உள்ள சிவாலயங்களில் விடிய விடிய நடராஜப் பெருமானுக்கு விதவிதமான பழங்களில் அபிஷேகம் செய்யப்பட்டது. 

பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நடராஜ பெருமானுக்கு இரவு முழுவதும் நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டனர். அபிஷேகங்கள் முடிவடைந்து இன்று காலை 5 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், வீதி உலா உற்சவமும் நடைபெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com