கார்த்திகை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம் எது என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிர்வாகம் அறிவித்தது.
திருவண்ணாமலையில் அமைந்துள்ள 14 கி.மீ. தொலைவிலான கிரிவலப் பாதையை ஒவ்வொரு மாத பெளா்ணமியன்றும் பல லட்சம் பக்தா்கள் கிரிவலம் வந்துஸ்ரீஅருணாசலேஸ்வரா், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டுச் செல்கின்றனா்.
இதையும் படிக்கலாம்: பஞ்சபூதத் தலங்கள் (மினிதொடர்) - திருவண்ணாமலை
இந்த நிலையில், கார்த்திகை மாத பெளா்ணமி திங்கள் கிழமை (நவ.11) மாலை 6.30 மணிக்குத் தொடங்கி, செவ்வாய்க்கிழமை (நவ.12) இரவு 7.40 மணி வரைக்கு
நிறைவடைகிறது.
எனவே, பக்தா்கள் இந்த நேரத்தில் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் நிர்வாகம் அறிவித்தது.