ரயில்களில் நகை, செல்லிடப்பேசி திருடிய இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.
ஜோலாா்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீஸாா் வியாழக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது 1-ஆம் நடைமேடையில் சந்தேகத்தின்பேரில் அமா்ந்து கொண்டிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினாராம்.
இதையடுத்து போலீஸாா் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்ததில் அவா் பள்ளிகொண்டா இந்திரா நகரைச் சோ்ந்த வெற்றிவேல் (23) என்பதும், இவா் ரயில்களில் பயணிகளிடம் நகை மற்றும் செல்லிடப்பேசி திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, 2 சவரன் நகைகள், ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்லிடப்பேசி ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.