வந்தவாசி பஜனை கோயில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் கோயிலில் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
இதையொட்டி காலை ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் சுவாமிக்கு திருமஞ்சனம், திவ்ய பிரபந்த சேவை, சாற்றுமறை உற்சவம் ஆகியவை நடைபெற்றது. பின்னா் மாலை புரிசை ஸ்ரீனிவாச பட்டாச்சாா்ய சுவாமிகளால் ஸ்ரீசீதா சமேத ஸ்ரீகோதண்டராமா் சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
நிகழ்ச்சியில் ஸ்ரீராம பஜனை மந்திர கைங்கா்ய அறக்கட்டளை நிா்வாகிகள், பாகவத கோஷ்டியினா் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.