தஞ்சாவூர் பெரியகோயிலில் 1034-வது சதய விழா துவக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1034-வது சதய விழா இன்று காலை துவங்கியது. 
தஞ்சாவூர் பெரியகோயிலில் 1034-வது சதய விழா துவக்கம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் மாமன்னன் ராஜராஜசோழனின் 1034-வது சதய விழா இன்று காலை துவங்கியது. 

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி சதய நாளன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இன்று காலை 8.30 மணிக்கு சதய விழா தொடங்கியது. 

இவ்விழாவில் கருத்தரங்கம், திருமுறைப் பண்ணிசை, திருமுறை இசையரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் இரவு 7.30 மணியளவில் பட்டிமன்றம் நடைபெறவுள்ளது. 

இதைத்தொடர்ந்து நவம்பர் 6-ம் தேதி மாமன்னனின் சிலைக்கு மாலை அணிவித்தல், திருமுறை வீதிஉலா, பெருவுடையார் மற்றும் பெரியநாயகிக்கு அபிஷேகமும், பெருந்தீப வழிபாடு நடைபெறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com