ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவுக்கான முகூர்த்தக்கால் நடப்பட்டது

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 25-ம் தேதி தொடங்குவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 25-ம் தேதி தொடங்குவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது. 

பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. 

டிசம்பர் 27-ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது. 

இதற்கான ஏற்பாடுகளை இந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com