திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா டிசம்பர் 25-ம் தேதி தொடங்குவதையொட்டி முகூர்த்தக்கால் நடப்பட்டது.
பிரசித்தி பெற்ற ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு வைகுண்ட ஏகாதசி உற்சவத்தை முன்னிட்டு ஆயிரங்கால் மண்டபம் அருகில் முகூர்த்தக்கால் நடப்பட்டது.
டிசம்பர் 27-ம் தேதி முதல் பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஜனவரி 6-ம் தேதி வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் என்னும் பரமபத வாசல் திறப்பு நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை இந்த அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.