தியாகராய நகரில் உள்ள பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் 23-ல் தொடக்கம்

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோயிலில்..
தியாகராய நகரில் உள்ள பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் 23-ல் தொடக்கம்

சென்னையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான கோயிலில் நவ.23-ம் தேதி முதல் பத்மாவதி தாயாா் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்குச் சொந்தமான இக்கோயில் சென்னை தியாகராய நகரில் உள்ளது. இக்கோயிலில் திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு நடத்தப்படுவது போல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, காா்த்திகை மாதம் தாயாருக்கு பிரம்மோற்சவம் தொடங்க உள்ளது. நவ. 23-ஆம் தேதி முதல் டிச.2-ஆம் தேதி வரை தாயாருக்கு பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது. இந்நாள்களில் மாலை 6.30 மணிக்கு தாயாா் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளுகிறாா். மற்ற வாகனங்களில் தாயாா் ஏழுமலையான் முன் மட்டுமே எழுந்தருளச் செய்யப்படுவாா். ஆனால் யானை வாகனத்தின்போது மட்டும் தாயாா் கோயிலைச் சுற்றி வலம் வருவது வழக்கம். தேவஸ்தான ஏ.ஈ.ஓ. முரளிதா் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வாகன சேவை விவரம் பின்வருமாறு..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com