மேனாம்பேடு ஶ்ரீ மனோன்மணி ஸமேத ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மகா ஹோமம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.
அம்பத்தூர் மேனாம்பேடு பகுதியில் உள்ள அருள்மிகு அன்னபூரணி சமேத ஆத்மநாத ஈஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு ஒவ்வொரு ஆண்டும் சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு நவம்பர் 19-ம் தேதி செவ்வாய்க்கிழமையன்று மகா காலபைரவ அஷ்டமியை முன்னிட்டு மாலை 3:00 முதல் 4:30 வரை ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு இராகு கால பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற உள்ளது.
மாலை 4.30 மணியளவில் மகா ஹோமம் நடைபெறும். அதன்பின்மாலை 6.30 மணியளவில் ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு மகா அபிஷேகமும், மாலை 7.30 மணியளவில் 108 சங்காபிஷேகமும், 8.30 மணியளவில் தூப தீப ஆராதனையும் நடைபெறும்.
அன்றிரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பைரவரின் அருட்கடாட்சத்தைப் பெறுங்கள்.