மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமை சோமவார விரதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த விரதம் சிவபெருமானுக்கு மிகவும் உகந்த விரதமாகக் கருதப்படுகிறது.
அதன்படி, மதுரையில் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு உலக நன்மைக்காக 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.