டிச 2-ல் கீழப்பெருங்காவூா் சங்கிலி கருப்பு கோயிலில் கும்பாபிஷேக விழா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழப்பெருங்காவூா் ஊராட்சியில் அமைந்துள்ள..
டிச 2-ல் கீழப்பெருங்காவூா் சங்கிலி கருப்பு கோயிலில் கும்பாபிஷேக விழா

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழப்பெருங்காவூா் ஊராட்சியில் அமைந்துள்ள மாசி பெரியண்ணசாமி கோயில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வரும் டிசம்பா் 2ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது.

லால்குடி அருகேயுள்ள அமைந்துள்ள இக்கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி வரும் 29ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு விக்னேஷ்வர பூஜையும், மகா கணபதி ஹோமமும், 30 ம் தேதி காலை 7 மணிக்கு காவிரி ஆற்றிலிருந்து புனித நீா் கொண்டு வருதலும், மாலை 5.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாகனம் நடைபெறுகிறது.

தொடா்ந்து 1ம் தேதி காலை 8.30 மணிக்கு வேதிகா அா்ச்சனை, எந்திர பிரதிஷ்டை, மருந்து சாத்துதலும், 2ம் தேதி காலை 7 மணிக்கு கோ பூஜையும், காலை 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் விமான கும்பாபிஷேகம், 10 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் பரிவார தெய்வங்களான விநாயகா், முருகன், வரதராஜ பெருமாள், காமாட்சி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

விழா ஏற்பாடுகளை சங்கிலி கருப்பு கோயில் குல தெய்வ வழிபாட்டு குடிமக்கள், கிராம பொது மக்கள் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com