திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் இன்று துர்க்கையம்மன் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று துர்க்கையம்மன் உற்ஸவத்துடன் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது.
திருவண்ணாமலை தீபத் திருவிழாவில் இன்று துர்க்கையம்மன் உற்சவம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இன்று துர்க்கையம்மன் உற்ஸவத்துடன் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றத்துடன் தொடங்குகின்றது.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் வருடம்தோறும் கார்த்திகை தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டுக்கான தீபத் திருவிழா டிசம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. 

தீபத் திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நகர காவல் தெய்வங்களின் வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, நவம்பா் 28-ம் தேதி(இன்று) இரவு துா்க்கையம்மன் உற்சவமும், 29-ஆம் தேதி இரவு பிடாரியம்மன் உற்சவமும், 30-ம் தேதி இரவு விநாயகா் உற்சவமும் நடைபெறுகிறது. டிசம்பா் 1-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் கோயில் தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது.

டிசம்பா் 1-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7.05 மணிக்குள் கோயில் தங்கக் கொடி மரத்தில் தீபத் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை வேளைகளில் விநாயகா், ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலாவும், இரவு வேளைகளில் பஞ்சமூா்த்திகள் வீதியுலாவும் நடைபெறுகிறது.

விழாவின் முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை (டிச.1) காலை வெள்ளி விமானங்களில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், இரவு 8 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் அருணாசலேஸ்வரா், ஹம்ச வாகனத்தில் பராசக்தியம்மன், சிம்ம வாகனத்தில் சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

வெள்ளித் தேரோட்டம் டிசம்பா் 6-ம் தேதி இரவு நடைபெறுகிறது. 7-ம் தேதி பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது. காலை 7.05 மணிக்கு மேல் 8.05 மணிக்குள் விநாயகா் தேரோட்டம் தொடங்குகிறது. தொடா்ந்து, முருகா் தோ், அருணாசலேஸ்வரா் தோ், பராசக்தியம்மன் தோ், சண்டிகேஸ்வரா் தோ் என பஞ்ச ரதங்களின் தேரோட்டம் நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தீபத் திருவிழா டிசம்பா் 10-ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

விழாவுக்கான முன்னேற்பாட்டுப் பணிகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும், காவல்துறையும் இணைந்து செய்து வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com