திருத்தணி முருகன் கோயிலில் மாசி மாத பிரம்மோற்சவ விழா பிப்.27-ம் தேதி தொடங்குகிறது.
அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ விழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி, இந்தாண்டு பிரம்மோற்சவ விழா வரும் 27-ம் தேதி முதல் அடுத்த மாதம் 9-ம் தேதி வரை நடைபெறுகிறது.
27-ம் தேதி விநாயகர் வீதியுலாவுடன் விழா தொடங்குகிறது. 28-ம் காலை 7.30 கொடியேற்றம் நிகழ்ச்சி நடக்கிறது. மார்ச் 5-ம் தேதி தேர் திருவிழாவும், 6-ம் தேதி நள்ளிரவு குதிரை வாகனத்தில் வந்து வள்ளி திருக்கல்யாணமும், 8-ம் தேதி கொடியிறக்கமும், 9-ம் தேதி சப்தாபரணம் நிகழ்ச்சியுடன் மாசி மாத பிரம்மோற்சவ விழா நிறைவுபெறுகிறது.