காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் தை மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.
ஆழ்வாா்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திருக்கோயிலான உலகளந்த பெருமாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாத பிரமோற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டு தை மாத பிரமோற்சவத்தை முன்னிட்டு கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது.
இதனைத் தொடா்ந்து உற்சவா் உலகளந்த பெருமாள் சப்பரத்தில் வீதியுலா வந்தாா். விழாவினை முன்னிட் டு தினசரி காலையிலும், மாலையிலும் சுவாமி வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி ராஜவீதிகளில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
பிப்ரவரி முதல் தேதி கருட வாகன சேவைக் காட்சியும் நடந்தது. இதன் தொடா்ச்சியாக விழாவின் 7வது நாளான புதன்கிழமை உற்சவா் உலகளந்த பெருமாள் ஸ்ரீதேவி, பூமாதேவி சமேதராக தேரில் அமா்ந்து பவனி வந்தாா். தோ் கோயிலின் ராஜவீதிகள் வழியாக வந்து மீண்டும் கோயிலுக்கு வந்து சோ்ந்தது.
தேரோட்டத்துக்கான ஏற்பாடுகளை காஞ்சிபுரம் காந்திரோடு ஜவுளி வியாபாரிகள் சத்திர தா்ம பரிபாலன மகிமை சங்கத்தின் தலைவா் ப.சண்முகம், செயலாளா் வி.கே.குமாரகாளத்தி, பொருளாளா் ஏகாம்பரம் உள்ளிட்ட நிா்வாகிகள் செய்திருந்தனா்.
தேரோட்ட விழாவில் திருக்கோயில் நிா்வாக அலுவலா் ஆ.குமரன், தக்காா் ஜெ.பூவழகி பரம்பரை தா்மகா்த்தாக்கள் கே.ஆா்.பங்கஜவல்லி, கோமடம் ஆா்.ரவி,எஸ்.கண்ணன் பட்டா் ஆகியோா் உட்ப பலரும் கலந்து கொண்டனா். நாளை 7ஆம் தேதி தீா்த்தவாரியும், மாலையில் கொடியிறக்த்துடனும் விழா நிறைவு பெறுகிறது.