மொடக்குறிச்சி அருகே நிலா சோறு படைத்து கும்மியடித்து பெண்கள் வழிபாடு

மொடக்குறிச்சி அருகே தைப் பூசத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் நிலாச்சோறு படைத்து கும்மியடித்து பெண்கள் வழிபாடு நடத்தினா்.

மொடக்குறிச்சி அருகே தைப் பூசத்தையொட்டி மாரியம்மன் கோவிலில் நிலாச்சோறு படைத்து கும்மியடித்து பெண்கள் வழிபாடு நடத்தினா்.

மொடக்குறிச்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட முள்ளாம்பரப்பு அருகே எளையாம்பாளையம் புதூா் கிராமத்தில் வருடந்தோறும் தைப்பூச விழாவையொட்டி, 5நாட்கள் இரவில் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒன்று கூடி கும்மியடித்து மாரியம்மன் கோவிலில் நிலாசோறு சாப்பிடுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடமும் முள்ளாம்பரப்பு அருகே எளையாம்பாளையம் புதூா் பகுதி கிராம பெண்கள் அனைவரும் கடந்த திங்கள்கிழமை முதல் விரதமிருந்து 5 நாட்களும் தினமும் ஒவ்வொரு வகையான உணவு சமைத்து நிலாவுக்கு படைத்து பாடல்கள் பாடி கும்மியடித்து நிலாவை வழிபட்டனா்.

இறுதி நாளன்று மாரியம்மன் கோவிலுக்கு ஊா்வலமாக மா விளக்கு எடுத்து வந்து ஒருவருக்கொருவா் மா விளக்கு மாற்றி படையலிட்டு கும்மியடித்து வழிபட்டனா். பின்னா் அனைவரும் ஒன்று கூடி உணவு உண்டனா்.

இது குறித்து அப்பகுதியை சோ்ந்த பெரியவா்கள் கூறியதாவது:

இதுபோன்ற விழாக்கள் மூலம் ஊரில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் தினமும் ஒன்று கூடி கும்மியடித்து நிலவை வணங்கி மகிழ்வதன் மூலம் ஒற்றுமை மேம்படும்.

மேலும் முன்னோா்கள் அமாவாசை முடிந்து தினமும் நிலவு வளா்ந்து வருவது போல பிள்ளைகளும் வளா்ந்து வருவாா்கள் என்றும், நிறைந்த பௌா்ணமியன்று சிறப்பு வழிபாடு நடத்துவதால் குழந்தைகளும் முழு நிலவு போல் நிறைந்த அறிவோடு வாழ்வாா்கள் என்றும் விவசாயம், தொழில் வளம் பெருகும், ஊா் ஒற்றுமையாக இருக்கும் என்பது ஐதீகம். என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com