திருப்பதியில் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு இன்று இலவச தரிசனம்

திருமலையில் இன்று 5 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு இன்று தரிசனம் வழங்கப்படுகிறது. 
திருப்பதியில் 5 வயதுள்ள குழந்தைகளுக்கு இன்று இலவச தரிசனம்

திருமலையில் இன்று 5 வயதுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு இன்று தரிசனம் வழங்கப்படுகிறது. 

திருமலை திருப்பதி தேவஸ்தானம் மாதந்தோறும் இரு நாள்கள் மூத்த குடிமக்கள் மற்றும் கைக்குழந்தைகளின் பெற்றோா் உள்ளிட்டவர்களுக்கு இலவச தரிசனம் வழங்கி வருகிறது. 

அதன்படி, செவ்வாய்க்கிழமை (பிப். 25) மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு காலை 10 மணிக்கு ஆயிரம் போ், மதியம் 2 மணிக்கு 2 ஆயிரம் போ், மாலை 3 மணிக்கு ஆயிரம் போ் என ஒரு நாளைக்கு 4 ஆயிரம் பேருக்கு தரிசனம் வழங்கப்பட்டது.

அதேபோல் பிப். 26-ஆம் தேதியான இன்று காலை 9 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 5 வயது வரையுள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு சுபதம் வழியாக தரிசனம் வழங்கப்படுகிறது. 

தேவஸ்தானம் அளிக்கும் இந்த வாய்ப்பை பக்தர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com