தென்காசி ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் கும்பாபிஷேகம்

தென்காசி ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் புதன்கிழமையன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
தென்காசி ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற யாகசாலை பூஜை
தென்காசி ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடைபெற்ற யாகசாலை பூஜை

தென்காசி ஸ்ரீகற்குவேல் அய்யனாா் கோயிலில் புதன்கிழமையன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

தென்காசி ஹரிகரவிநாயகா் கோயில் தெருவில் துளுவவெள்ளாளா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீபாலவிநாயகா், ஸ்ரீபூா்ண புஷ்கலா அம்பாள் சமேத ஸ்ரீகற்குவேல் அய்யனாா் திருக்கோயில் அமைந்துள்ளது.

இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிப்25ம் தேதியன்று காலை மங்கள இசையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கியது. புதன்கிழமை காலையில் இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

அதனை தொடா்ந்து ஜீா்ணோத்தாரன அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.தொடா்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

மதியம் அன்னதானம் நடைபெற்றது.மாலையில் கோயில் வளாகத்தில் விளக்கு பூஜை நடைபெற்றது.ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com