திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.4-ல் தெப்பத் திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.4-ல் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.4-ல் தெப்பத் திருவிழா

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பிப்.4-ல் தெப்பத் திருவிழா நடைபெறுகிறது. 

அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. திருவாட்சி மண்டபத்தில் விநாயகர் சீவிலி நாயகர் முன் ரிஷப யாகம் முடிந்து சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில் கொடிக்கம்பம் முன் எழுந்தருளினர். சிவாச்சாரியார்களால் கொடியேற்றப்பட்டு, திரவிய அபிஷேகங்கள் நடந்தன. 

பிப்.2 வரை தினம் காலை, மாலையில் சுவாமி அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருள்வர். முக்கிய நிகழ்வாக பிப்.3-ம் தேதி காலை தெப்பம் நடைபெற்ற பின் வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி தேரோட்டம் நடக்கும். பிப்.4-ல் தெப்பக்குளம் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி திருவிழா நடக்கும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com