புளியங்குடி அருள்மிகு லட்சுமி நரசிங்க பெருமாள் திருக்கோவில் சுவாதி திருமஞ்சன பூஜை வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது.
இதையொட்டி அன்று மாலை கும்ப பூஜை, ஹோமம், திருமஞ்சன அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து உற்சவமூா்த்தி திருக்கோயிலில் வலம் வரும் வைபவம் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ஸ்ரீதேவி, மீனாட்சிசுந்தரம்பட்டா் மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.