வேலூரில் உள்ள ஸ்ரீபுரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலுக்கு திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரம் சமர்பிக்கப்பட்டது.
வேலூரை அடுத்த ஸ்ரீபுரம் பொற்கோயில் வளாகத்தில் புதிதாக 9 அடி உயரத்தில் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மகா கும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை (டிசம்பர் 9) காலை 9 மணிக்கு மேல் 10.30க்குள் நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு இக்கோயிலுக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதன்கிழமை பட்டு வஸ்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. இதனை, நாராயணி பீடம் சக்தி அம்மாவிடம் தேவஸ்தான அறங்காவலர் குழுத் தலைவர் சதலவாடி கிருஷ்ணமூர்த்தி வழங்கினார்.