காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு பாதயாத்திரை

வைணவ குரு ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை பாத யாத்திரை மேற்கொண்ட வைணவர்கள்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை பாத யாத்திரை மேற்கொண்ட வைணவர்கள்.

வைணவ குரு ராமானுஜரின் 1,000-ஆவது ஆண்டு ஜயந்தியை முன்னிட்டு, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராமானுஜர் கோயிலுக்கு பாத யாத்திரையாக பக்தர்கள் சென்றனர்.

சென்னை, அரும்பாக்கம் ஸ்ரீஹரி மடம் ஸ்ரீமதே நம்பிள்ளை ராமானுஜ மகா தேசிகர் சுவாமிகள் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட ராமானுஜ அடியார்கள் மற்றும் பக்தர்கள், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வரை வைணவ ஒற்றுமையை வலியுறுத்தி ஞாயிற்றுக்கிழமை பாதயாத்திரை புறப்பட்டனர்.
இதில் ஸ்ரீராமானுஜரின் புகழையும், மங்களாசாசனம் மற்றும் பஜனை நாலாயிர திவ்ய பிரபந்தம் பாடியபடி, காஞ்சிபுரத்தில் உள்ள காந்தி சாலை, நான்கு ராஜ வீதி, பேருந்து நிலையம், சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம் வழியாக ஸ்ரீபெரும்புதூர் ராமானுஜர் கோயிலை சென்றடைந்து அங்கு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com