ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாளுக்கு ரூ.30 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்க ஆரம் புதன்கிழமை காணிக்கையாக வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம் மற்றும் வைணவ மகா குரு ராமானுஜரின் 1000-ஆவது ஆண்டு ஜயந்தி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஆதிகேசவ பெருமாளுக்கு பக்தர்கள் சார்பில் சுமார் ரூ. 30 லட்சம் மதிப்புள்ள 100 பவுன் தங்க ஆரம் காணிக்கையாக அளிக்கப்பட்டது. இதனை ஸ்ரீபெரும்புதூர் அப்பன் பரகால ராமானுஜ எம்பார் ஜீயர் வழங்க, இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் அசோக்குமார், துணை ஆணையர் வான்மதி ஆகியோர் புதன்கிழமை பெற்றுக் கொண்டனர்.