சென்னை மாநகராட்சி: கனமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! ஆக. 28-ல் மேட்டூர் அணை திறப்பு! முதல்வர் விஜய் வருகிறார்! ஏற்பாடுகள் முனைப்பு!13 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு! ‘வந்தே மாதரம் முழுமையாகப் பாடப்போவதில்லை’ - கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் உறுதிதமிழ்நாட்டில் வேகமெடுக்கும் பன்றிக் காய்ச்சல் பரவல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை!தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை! மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

ஹிமாச்சலில் பாலம் இடிந்து விழும் அபாயம்: அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

ஹிமாச்சலில் உள்ள கின்னார் பகுதியில் உள்ள ரிப்பா பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST


ஹிமாச்சலில் உள்ள கின்னார் பகுதியில் உள்ள ரிப்பா பாலம் இடிந்து விழும் அபாயம் உள்ளதால் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

ஜம்மு - காஷ்மீர் மாநிலம், இமயமலை பகுதியில் உள்ள அமர்நாத் யாத்திரை சென்று இதுவரை 2.74 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். 237 பேர் அடங்கிய புதிய யாத்ரீகர்கள் குழு இன்று புறப்பட்டு சென்றுள்ளது. 

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கின்னார் பகுதியில் பலத்த மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. மலையேறும் பகுதியில் உள்ள ரிப்பா பாலம் வெள்ள நீர் சூழ்ந்து இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

யாத்ரீகர்களின் பாதுகாப்பு கருதி அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. பஹல்காம் மற்றும் பல்டால் ஆகிய இரு இடங்களில் யாத்ரீகர்கள் முகாம் அமைத்துத் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

வெள்ள அபாயம் குறைந்த பிறகு மீண்டும் குகைக் கோயில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.