திருமலை ஏழுமலையானை ஆந்திரம், தெலங்கானா மாநில ஆளுநர் இ.எஸ்.எல். நரசிம்மன் தன் குடும்பத்தினருடன் புதன்கிழமை தரிசித்தார்.
செவ்வாய்க்கிழமை மாலை திருச்சானூர் பத்மாவதி தாயாரை தரிசனம் செய்த அவர் இரவு திருமலைக்கு வந்தார்.
புதன்கிழமை காலை ஏழுமலையானை தரிசனம் செய்த அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சிறப்பு பிரசாதங்களை வழங்கினார். அதைத் தொடர்ந்து மீண்டும் திருச்சானூர் சென்று பெரிய சேஷ வாகனத்தில் வீதியுலா புறப்பட்ட தாயாரை தரிசனம் செய்தார்.