வாலாஜாபேட்டை கீழ்புதுப்பேட்டையில், அமைந்துள்ள தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் புதன்கிழமை அமாவாசை யாகம் நடைபெற்றது.
இதில், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் கூட்டுப் பிரார்த்தனை நடத்தப்பட்டது. இதில் செஞ்சி தாலுக்கா நல்லான்பெற்றபிள்ளை கிராமத்தில் உள்ள தவத்திரு சிவஜோதி மோன சித்தர் மற்றும் சென்னை மகா கால பைரவர் ஞானபீடம் சுவாமிகள் பங்கேற்றனர்.
இந்த யாகத்தில் மிளகாய் வற்றல், வேப்ப எண்ணெய், கடுகு, வெண் கடுகு, சிகப்பு அரளி, 108 மூலிகைகள், மஞ்சள், வெள்ளை பூசணிக்காய் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டன.
தொடர்ந்து மகா பூர்ணாஹுதியுடன் மகிஷாசுரமர்த்தினிக்கு சிறப்பு திருமஞ்சனமும் நடைபெற்றன.