குரோம்பேட்டை குமரன்குன்றம் மலைக்கோயில் அருள்மிகு பாலசுப்ரமண்யசுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர ப்ரமோத்ஸவம் இன்று காலை 9.00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது.
மார்ச் 21 முதல் மார்ச் 30 வரை பிரதி தினமும் காலை மாலை இருவேளைகளும் விசேஷ யாகசாலை பூஜை ஹோமங்களும் வேத பாராயணம் தேவார இன்னிசை விசேஷ கச்சேரிகளும் நடைபெறும்.
20.03.18 காலை 11.00 மணிக்கு திரு வள்ளி சமேத சங்கு சக்ர சண்முகருக்கு ஐஸ்வர்ய சண்முகர் திரு தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறும்.
30.03.18 பகல் 12.00 மணிக்கு அவரோகணம்
31.03.18 பகல் 11.00 மணிக்கு திரு வள்ளி சமேத சங்கு சக்ர ஐஸ்வர்ய சண்முகருக்கு திரு வள்ளி திருக்கல்யாணம் நடைபெறும்.
01.04.18 பகல் 12.00 மணிக்கு திரு இடும்பன் பூஜை விடையாற்றி உற்சவம் நடைபெறும்.