ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
நவராத்திரியையொட்டி வைக்கப்பட்ட அகல்விளக்குகள்.
நவராத்திரியையொட்டி வைக்கப்பட்ட அகல்விளக்குகள்.


வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இவ்விழா கடந்த 2ஆம் தேதி தொடங்கியது. மூலவர் அம்மனுக்கு சிறப்பு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. நவராத்திரி விழாவையொட்டி பல வண்ண பொம்மைகளை கொலு கண்காட்சி வைக்கப்பட்டிருந்தன.
ஆயூத பூஜையையொட்டி வியாழக்கிழமை மாலையில் கோயில் வளாகத்தில் சிறிய, பெரிய வடிவிலான அகல் விளக்குகளைக் கொண்டு திருவிளக்கு பூஜையை ஞானபீடத்தின் பீடாதிபதி சுவாமிவேல் சுவாமிஜி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 
விழா ஏற்பாடுகளை ஞானபீடத்தின் நிறுவனர் ஆ.பெருமாள் தலைமையில் விழாக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com