காஞ்சிபுரம் மாவட்டம் மாகறல் ஊரில் உள்ள மாகறலீஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலும், வாலாஜாபாத்திலிருந்து 13 கி.மீ. தூரத்திலும் உள்ள சிலம்பேஸ்வரர் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள தொன்மையான சிதிலமடைந்த விசாலாக்ஷி ஸமேத விஸ்வநாதர் கோவிலில் சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் அறப்பணிக்குழுவினர் 21.10.2018 ஞாயிற்றுக்கிழமை உழவாரப்பணி மேற்கொண்டனர்.


மாகறலைச் சேர்ந்த வெங்கடேசன், திருஞானசம்பந்தர் மடத்தைச் சேர்ந்த சண்முகம் ஆகியோர் உழவாரப்பணிக்குண்டான ஏற்பாடுகளைச் சிறப்பாகச் செய்து கொடுத்தனர். தண்டலத்தில் உள்ள ராஜலக்ஷ்மி பொறியியல் கல்லூரி NSS மாணவ மாணவியர் பலரும், பேராசிரியர் ஆனந்தராஜ் தலைமையில் இப்பணியில் ஆர்வமுடன் ஈடுபட்டனர்.


இங்குள்ள மிகப்பெரிய அரச மரத்தில் அம்பாள் வாசம் செய்வதாக பிரசன்னம் தெரிவித்ததால் அனைவரும் அதற்கு மஞ்சள் நீர் சமர்ப்பித்தனர். தொடர்ந்து, அருகில் உள்ள சிலம்பேஸ்வரர் கோவிலில் பூஜை செய்யும் மணிகண்டன், இக்கோவிலில் உள்ள விக்ரஹங்களுக்கு பூஜை செய்து ஆரத்தி காண்பித்தார். காலை 8 மணிக்குத் துவங்கிய இப்பணி மாலை 4 மணிக்கு நிறைவுற்றது.
- வி. இராமச்சந்திரன், நிர்வாக அறங்காவலர்
அண்ணாமலையார் அறப்பணிக்குழு, சென்னை
அலைபேசி: 9884080543
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் தோல்விகளால் துவளும் பாகிஸ்தான்! டி20 ஓய்வு குறித்து மனம் திறந்த கேப்டன் சல்மான்!

புதிய மைல்கல்லை எட்டிய சென்னை ஒன் செயலி!

ஈரானில் இருந்து நாடு திரும்பிய 2,300 இந்தியர்கள்! - மத்திய அரசு அறிவிப்பு!

ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


