நாதன்கோவில் ஜெகந்நாத பெருமாள் திருக்கோயிலில் சிறப்பு அஷ்டமி ஹோமம் நடைப்பெற்றது.
கும்பகோணம் அடுத்துள்ள 108 திவ்யதேசத்தில் ஒன்றான, நாதன் கோவில் எனும் நந்திபுரவிண்ணகரத்தில் எழுந்தருளியிருக்கும் அருள்மிகு செண்பகவல்லி தாயார் சமேத ஜெகநாத பெருமாள் திருக்கோயிலில் வளர்பிறை அஷ்டமி தினத்தினை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 2 மணி வரை சிறப்பு பூஜையாக, ஸ்ரீசுக்த ஹோமம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து, தாயாருக்கு [மூலவர்] சிறப்பு திருமஞ்சனமும், பின்னர் சிறப்பு அலங்காரமும், தூப-தீபாராதனைகளும் நடைபெற்றது. இதில், ஆன்மீக அன்பர்கள் பெரும் திரளாகக் கலந்து கொண்டு, மகாலட்சுமியின் அம்சமான, அருள்மிகு செண்பகவல்லி தாயாரை வழிபாடு செய்தார்கள். விழா நிறைவில், பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
இவ்விழா ஏற்பாட்டினை திருகோவில் நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
குடந்தை ப.சரவணன் - 9443171383