கோனேரிராஜ புரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜப்பெருமானுக்கு, புரட்டாசி மாத திருமஞ்சனம் நடைபெற்றது.
கோனேரிராஜபுரம், அருள்மிகு உமாமகேஸ்வரர் திருக்கோவிலில் எழுந்தருளியிருக்கும், உலகப்புகழ்பெற்ற, அருள்மிகு சிவகாமி அம்பாள் சமேத - நடராஜப் பெருமானுக்கு வருடத்தில் நடைபெறும் ஆறு அபிஷேகங்களில் ஒன்றாகிய, புரட்டாசி - சுக்லபட்ச - சதுர்த்தசி தினத்தினை முன்னிட்டு அர்த்த ஜாம கால அபிஷேகம் எனும் திருமஞ்சனம் 23-9-2018 (ஞாயிற்றுக்கிழமை) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு, சாமி தரிசனம் செய்தார்கள்.
குடந்தை ப.சரவணன் - 9443171383