அம்பத்தூரில் உள்ள மேனாம்பேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமனோன்மணி சமேத ஸ்ரீஸ்வர்ணாகர்ஷண பைரவர் ஆலயத்தில், கடந்த (13.12.2018) வியாழக்கிழமை மாலை 6.00 மணியளவில், சிவபெருமானே மஹா பைரவராய் தோன்றி அந்தகாசூரனை சம்ஹாரம் செய்யும் சம்பா சஷ்டி எனப்படும் சூரசம்ஹார நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பக்தகோடிகள் அனைவரும் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.