மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? (விடியோ)

பொதுவாக சில மாதங்களில் சில விஷயங்களை செய்யக் கூடாது என்று பெரியவர்கள்...
மார்கழி மாதத்தில் என்ன செய்யலாம்? என்ன செய்யக்கூடாது? (விடியோ)

பொதுவாக சில மாதங்களில் சில விஷயங்களை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் சொல்லிவைத்துள்ளார்கள். அதில் குறிப்பாக இந்த மார்கழி மாதம். இந்த மார்கழி மாதம் பீடை மாதம் என்றும் அந்த மாதத்தில் எந்தவித நல்ல விஷயங்களையும் செய்யக்கூடாது என்று சொல்வதுண்டு. 

ஆனால் மாதங்களில் உயர்ந்த மாதம் மார்கழி மாதம். கிருஷ்ண பரமாத்மா மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்கிறார். அப்படியென்றால் இந்த மாதத்துக்கு எவ்வளவு சிறப்புகள் இருக்கின்றது என்று பாருங்கள். அப்படிப்பட்ட இந்த மாதத்தில் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொள்வோம். 

மார்கழியில் செய்யக்கூடாதவை..

மார்கழி மாதத்தில் அதிகாலைக்குப் பிறகு தூங்கக்கூடாது. நாலரை மணிக்கு எல்லாம் கண்டிப்பா குளிக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம். ஏன்னென்றால் அந்த நேரத்தில் இயற்கையில் இருந்து நமக்குக் கிடைக்கக்கூடிய ஆதீதமான ஆக்சிஜன் சக்தி இந்த உடலுக்கு அந்த ஆண்டு முழுவதும் வேண்டும் என்கிற நலனை நமக்குத் தருகிறது. அதனால் தான் மார்கழி மாசத்தில் கட்டாயம் அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும். 

மார்கழி மாதத்தில் பொதுவாக விதை விதைக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் இது விதை வளர்வதற்கான காலம் அல்ல. அதனால் தான் மார்கழி மாதம் விதை விதைத்தால் அந்த விதை சரியான உயிர் தன்மைப் பெற்று வளராமல் போய்விடும் என்பதாலேயே அதிகமான திருமணங்கள் மார்கழி மாதத்தில் செய்யக்கூடாது என்று சொல்வார்கள். 

அடுத்து, மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக்கூடாது. பெண்கள் எல்லோரும் இதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கோலம் என்பது அழகுக்காக மட்டும் இடக்கூடிய விஷயம் அல்ல. அது தர்மத்திற்காக இடக்கூடியது. கோலம் பற்றி நிறைய விஷயம் சொல்லலாம். 

இப்படி இதையெல்லாம் மார்கழியில் செய்யக்கூடாது என்றால் அப்போ என்ன செய்யனும்..

மார்கழியில் செய்ய வேண்டியவை..

மார்கழியில் இறைவனின் திருநாமத்தை ஜெபிக்கக்கூடிய பஜனையில் கலந்துகொள்ளலாம். திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை மார்கழி மாதத்தில் கட்டாயம் படிக்க வேண்டும். 30 நாளும் தப்பாமல் கோதை நாச்சியாரின் பாசுரங்களை கேட்டாலே நமக்குப் புண்ணியம். 

மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பாவை, திருப்பள்ளி எழுச்சி கட்டாயம் படிக்க வேண்டும். பக்திக்குரிய மாதம், பணிவாக இறைவனைச் சென்று அடைவதற்குரிய மாதம். வைகுண்ட ஏகாதசியும், ஆருத்திர என்கிற திருநாளும் வருகின்ற மாதம் இந்த மார்கழி மாதம். இதையெல்லாம் மகிழ்ச்சியாகப் புத்துணர்ச்சியாக கொண்டாட இறைவன் நமக்கு அருள் புரிய வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com