திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை!

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் நடைபெறும் விழாக்களில் முக்கியமானது கார்த்திகை தீபத் திருவிழாவாகும். நவம்பர் 14-ம் தேதி கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 

இந்நிலையில் பரணி, மகா தீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டுசெல்ல அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயில் சார்பில் வழங்கப்படும் உபயதாரர் அனுமதிச்சீட்டு பார் கோடு வசதி செய்யப்பட்டு, ஸ்கேன் செய்த பிறகே கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com