கும்பகோணம் அடுத்துள்ள, உலகப்புகழ் பெற்ற முருகன் தலங்களான ஆறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை சுவாமிநாதசுவாமி திருக்கோயிலின் கிழக்கு வாசலில் அமைந்துள்ள ஐந்தடி உயரம் உள்ள, சக்தி தேவியுடன் உடைய, அருள்மிகு ஸ்ரீ வல்லப கணபதி பெருமானுக்கு விநாயக சதுர்த்தி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்களும், அதனைத்தொடர்ந்து அலங்காரமும், தூப, தீபாரதனைகளும் நடைப்பெற்றது. இதில் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
- குடந்தை ப.சரவணன் - 9443171383