பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி ஊர்வலம்

திருமலையில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 
பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி ஊர்வலம்

திருமலையில் பிரம்மோற்சவத்தின் 3-ம் நாளான இன்று காலை சிம்ம வாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வந்தார். 

திருமலையில் கடந்த செப்.13-ம் தேதி மாலை வருடாந்திர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் விமரிசையாகத் தொடங்கியது. 

பிரம்மோற்சவ நாள்களில் காலையும், இரவும் மலையப்ப சுவாமி ஸ்ரீ தேவி பூதேவியுடன் பலவிதமான வாகனங்களில் பலவித அவதாரங்களில் மாடவீதியில் வலம் வந்து அங்கு கூடியிருக்கும் பக்தர்களுக்குச் சேவை சாதிப்பது வழக்கம். 

அதன்படி 3-ம் நாளான இன்று காலையில் மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதியில் வலம் வந்தார். இன்று மாலை முத்துப்பந்தலில் மலையப்ப சுவாமி வலம் வர உள்ளார். 

இந்த பிரம்மோற்சவத்தைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலையில் குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com