திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம், திருப்பாம்புரம் அருள்மிகு சேஷபுரீஸ்வரர்சுவாமி திருக்கோயிலில் ஸ்ரீஇராகும் - கேதுவும் ஏகசரீரமாக இருந்து இறைவனைப் பூஜித்து அருள்பெற்றதால் இது இராகு-கேது ஸ்தலம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்திற்கு பாம்புபுரம் தென்காளஹஸ்தி என்ற பெயர் உண்டு. இத்தலத்தை வழிப்படுவதால் திருக்குடந்தை, திருநாகேஸ்வரம், நாகூர் கீழ்பெரும்பள்ளம் மற்றும் காளஹஸ்தி ஆகிய ஐந்து திருத்தலத்தை வழிப்பட்ட ஒருமித்த பலன் உண்டு. இத்திருக்கோயிலில் வருகின்ற மாசி மாதம் 1-ம் தேதி 13.02.2019 புதன் கிழமைமதியம் 2.02-க்கு இராகு பகவான் கடக ராசியிலிருந்து மிதுன ராசிக்கும், கேது பகவான் மகர ராசியிலிருந்து தனுசு ராசிக்கும் இடம் பெயர்கின்றனர்.
இவ்விழாவினை முன்னிட்டு பக்தர்கள் நலன் கருதி 12.02.19 முதல் 14.02.19 முடிய மூன்று தினங்களுக்கு திருக்கோயில் நிர்வாகம் சார்பாக சிறப்பு யாகம், அபிஷேகம் மற்றும் அர்ச்சனை ஆகியவை சிறப்பாக நடைபெற உள்ளது.
பக்தர்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்துகொள்ள வேண்டுமாய் திருக்கோயில் நிர்வாகம் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
வழித்தடங்கள் விவரம்
இக்கோயிலுக்கு கும்பகோணம்(to) காரைக்கால் வழித்தடம், கற்கத்தி வழியாக திருப்பாம்புரம்
மயிலாடுதுறை (to) கொல்லுமாங்குடி, கற்கத்தி வழியாக திருப்பாம்புரம்
திருவாரூர் (to) சன்னாநல்லூர், பேரளம் வழியாக திருப்பாம்புரம்
காரைக்கால் (to) பேரளம் வழி கற்கத்தி வழியாக திருப்பாம்புரம்
திருக்கோயில் தொலைபேசி எண் - 0435 - 2469555