செய்திகள்
தை கிருத்திகை விழா: முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
தை கிருத்திகை விழா நேற்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
தை கிருத்திகை விழா நேற்று அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்றது.
திருத்தணி முருகன் கோயிலில் தை கிருத்திகையை முன்னிட்டு மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து தங்க வேல், தங்க கீரிடம் உட்பட வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.
இதேபோல், வடபழனி முருகன் கோயில், கந்தன்கோட்டை ஆகிய பிரசித்தி பெற்ற முருகன் கோயிலிகளிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முருகன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.