ஆடி மாத பிறப்பையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் புதுமணத் தம்பதிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.
ஆடி மாத பிறப்பையொட்டி பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு

ஆடி மாதப் பிறப்பை முன்னிட்டு பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் புதுமணத் தம்பதிகள் மற்றும் பக்தர்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.

ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த மாதத்தின் முதல் நாளான புதன்கிழமை பவானி சங்கமேஸ்வரர் மற்றும் வேதநாயகி அம்மன் சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டன.

இதில், புதுமணத் தம்பதிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.  பவானி கூடுதுறையில் பரிகார வழிபாடுகளும் நடைபெற்றன. காவிரி ஆற்றில் தற்போது குறைந்த அளவிலேயே தண்ணீர் செல்வதால் புனித நீராடும் பக்தர்கள் கூட்டம் மிகக் குறைந்த அளவிலேயே காணப்பட்டது.

செல்லியாண்டியம்மன், வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன், காமராஜர் நகரில் உள்ள எல்லையம்மன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com