திருவள்ளூர், நேத்தாஜி சாலையில் உள்ள ஸ்ரீ பஞ்சபாண்டவ சமேத ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயிலில் வருடத்திய யாக அக்கினி வசந்த விழா நடைபெறுகிறது.
ஆடி மாதம் 17-ம் தேதி (ஆகஸ்ட் 2, 2019) வெள்ளிக்கிழமை, சித்தயோகம் கூடிய சுபதினத்தில் காலை 5.00 மணிக்கு மேல் 6.30 மணிக்குள்ளாக கடக லக்கினத்தில் அம்மனுக்கு துவஜாரோஹணம் செய்து 10 நாட்களுக்கு தினசரி அம்மன் வீதி உலா உற்சவங்களும், ஆடி மாதம் 26-ம் தேதி (11.08.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை யாக அக்கினி வசந்த விழா உற்சவம் நடைபெறுகிறது.
விழாவில் சென்னை திருவெற்றியூர் சொல்லிசை செல்வர் சித்தாந்த ரத்தினம் கோ.ஜெயமூர்த்தி மகாபாரத சொற்பொழிவும், செய்யார் தாலுக்கா, நல்லாளம், சன்மார்க்க துறவி திரு. தஷ்ணாமூர்த்தி இசை வாசிப்பும் நடைபெறுகிறது.
இந்த விழாவில் பெரியோர்களும், தாய்மார்களும், பக்த மெய்யன்பர்களும் விழாவிற்கு வருகை தந்து விழாவினைச் சிறப்பித்து அம்மன் அருளை பெற வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.