நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

30-வது நாளில் நீல நிறப் பட்டாடையில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கும் அத்திவரதர்

அத்திவரதர் பெருவிழாவிள் 30-ம் நாளான இன்று ராமர் நீல நிறப் பட்டாடை உடுத்தி பல்வேறு..

News image
Updated On :30 ஜூலை 2019, 9:08 am

தினமணி

அத்திவரதர் பெருவிழாவிள் 30-ம் நாளான இன்று ராமர் நீல நிறப் பட்டாடை உடுத்தி பல்வேறு வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து  வருகிறார். 

கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பக்தர்களுக்கு காட்சியளித்துவரும் அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளார். சயன கோலத்தில் தரிசிக்க  நாளையுடன் கடைசி நாள் என்பதால் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அத்தி வரதரைக் காண காஞ்சியில் குவிந்துள்ளனர். 

அத்திவரதர் ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்தில் காட்சியளிக்க உள்ளதால், அதற்கான முன்னேற்பாடுகள் நாளை முதல் தொடங்க உள்ளது. இதனால், நாளை பகல் 12.00 மணியுடன் அத்திவரதர் தரிசனத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மீண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகாலை 5 மணியிலிருந்து அத்திவரதரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், ஆகஸ்ட் 3-ம் தேதி ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளதால் மாலை 5 மணி வரை மட்டுமே தரிசனத்துக்குப் பக்தர்கள்  அனுமதிக்கப்படுவர். ஆகஸ்ட் 15-ம் தேதி கருடசேவை உற்சவம் நடைபெற உள்ளதால் அன்றும் மாலை 5 மணிக்கு மேல் தரிசனம் செய்யப் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.