பிரசன்ன வெங்கடேசர் பிரம்மோற்சவம் :அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் வலம்
திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் கோலத்தில் பெருமாள் மாடவீதியில் வலம் வந்தார்.
இக்கோயிலில் வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பிரசன்ன வெங்கடேஸ்வரர் அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார்.
மாடவீதி வலம் முடிந்த பின் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது.
இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் வலம் வருவதைக் காண மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர். வாகன சேவைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் முன் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.