அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் வலம் வந்த கோதண்டராமர்.
அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை காலை அனுமந்த வாகனத்தில் வலம் வந்த கோதண்டராமர்.

பிரசன்ன வெங்கடேசர் பிரம்மோற்சவம் :அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் வலம்

திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் காலை அனுமந்த


திருப்பதியை அடுத்த அப்பளாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரர் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 6-ஆம் நாள் காலை அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் கோலத்தில் பெருமாள் மாடவீதியில் வலம் வந்தார். 
இக்கோயிலில் வியாழக்கிழமை முதல் வருடாந்திர பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. அதன் 6-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை காலை பிரசன்ன வெங்கடேஸ்வரர் அனுமந்த வாகனத்தில் கோதண்டராமர் அவதாரத்தில் மாடவீதியில் வலம் வந்தார். 
மாடவீதி வலம் முடிந்த பின் உற்சவர்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மாலை ஊஞ்சல் சேவையும் நடத்தப்பட்டது.
இரவு 8 மணிக்கு யானை வாகனத்தில் பிரசன்ன வெங்கடேஸ்வரர் வலம் வருவதைக் காண மாடவீதியில் பக்தர்கள் திரண்டனர். வாகன சேவைக்கு கற்பூர ஆரத்தி எடுத்து வணங்கினர். இதில் கோயில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். வாகன சேவையின் முன் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com